Friday, June 28, 2024

 கோம்பை சார்ந்த கவிதைகள்

        கருகிப் போகுமோ

வடக்கிருந்து மழை வந்தால்

போடிமலை தடுக்கும்

கிழக்கிருந்து மழை வந்தால்

சாலைமலை தடுக்கும்

தெற்கிருந்து மழை வந்தால்

பன்றிமலை தடுக்கும்

மேற்கிருந்து மழை வந்தால்

கோட்டைமலை தடுக்கும்

சுற்றிச் சுற்றி மழை பொழியும்

கோம்பைக்கு அது இல்லை

                                     காற்று

எற்றி எற்றி முகிலுருட்டும்

எறிதூரல் இல்லை.

வறுக்க வறுக்கத் தீய்ஞ்சுபோகும்

பச்சைச் சோளம் போல

வெயிலடிக்க வெயிலடிக்க 

அரண்டுபோகும் காடு

காட்டில் எறிந்த விதைவித்தெல்லாம்

கருகிப் போகுமோ; கருகிப் போகுமோ...

வாழ்க்கை கன்றிப் போகுமோ; கன்றிப் போகுமோ!


தட்டைக்காடும் தவிட்டுக் குருவிகளும்( கவிதைகள்)

கோவேத சுவாமிநாதன்

ப.எண். 12

டிசம்பர் - 2002


No comments:

Post a Comment