Tuesday, July 9, 2024

 கோம்பை  தேர்திருவிழா

அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி

            விநாயகர் மந்திரம்

ஐந்து கரத்தானை ஆணை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே !

            விஷ்ணு மந்திரம்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன் வந்தரையே அமத கலச

கஸ்தாய சர்வாமய வினாசலநாய

திரி லோக்க நாதய 

ஸ்ரீ மகா விஷ்ணுவே நமக !

கோம்பை அருள்மிகு திருமலைராயப் பெருமாளுக்கு பெண் கேட்டு நிச்சயம் செய்யும் நிகழ்ச்சி

பெண் வீட்டார் :

    வழி விடுங்க ... வழி விடுங்க... வழிவிடுங்கன்னா.....

மறைச்சுக்கிட்டு நிற்கிறீங்களே......

எங்க பொண்ணுங்க வர்ராங்க.......

ஏய்! முதலில் வழி விடுங்கையா......

எங்களுக்கு மறைக்காதீங்க .......

விலகுங்க ...விலகுங்க... விலகுங்க...

மாப்பிள்ளை வீட்டார் :

 பொண்ணுங்க வர்ராங்களா ?

எங்கங்க பொண்ணுங்க ?

பெண் வீட்டார்

அந்தா .....ரெண்டு பொண்ணுங்க

சிம்மாசனத்துல அமர்ந்து வராங்கல

அவங்கதான் எங்க பொண்ணுங்க...

மாப்பிள்ளை வீட்டார் :

அப்படியா ? ஆமா ? ரெண்டு பொண்ணுங்க வர்றாங்க ......

பெண் வீட்டார் :

எங்க ? மாப்பிள்ளைய காணும்  !

மாப்பிள்ளை எங்க வர்ராரு .....

எங்க மாப்பிள்ளை ? .......

மாப்பிள்ளை வீட்டார் :

அந்த ! யானை மேல வீரதீரமா

வர்றாருல அவர்தான் எங்க மாப்பிள்ளை

ரெங்கநாதரு.........

பெண் வீட்டார் :

மாப்பிள்ளையா ? என்னங்க சொல்லுறீங்க ......

அங்க யானை மேல தாடி மீசையெல்லாம்

நரைச்சு கூனி குறுகி ஒடுங்கிப்போய் உட்கார்ந்து இருக்காரே....

அவரா ...... உங்க மாப்பிள்ளை ?

(கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு பெண் வீட்டார் மாப்பிள்ளைய அருகில் சென்று பார்த்து வருதல் )

மாப்பிள்ளை வீட்டார்

ஏய்யா.... கறுப்பு கண்ணாடிய போட்டுக்கிட்டு இருட்டில போய் மாப்பிள்ளைய பார்த்தா .... மாப்பிள்ளை உங்களுக்குத் தெரியுமா ?

பெண் வீட்டார் :

அதெல்லாம் நல்லாத் தெரியுது......

நீங்க முதல்ல எங்க பொண்ணுங்கள பாருங்க !

மாப்பிள்ளை வீட்டார் :

ஏங்க ! இவங்களையா ..... பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க... தலையெல்லாம் நரைச்சு கூனு விழுந்து போயி கிழவியா உட்கார்ந்து இருக்காங்களே அவங்களையா பொண்ணுங்கன்னு சொல்லுறீங்க ......?

பெண் வீட்டார்

என்ன சொன்னீங்க.....

எங்க பொண்ணுங்கள பார்க்கனுமுன்னா 

ஆள ஒருநாள் பார்க்கனும் !

அழக ஒருநாள் பார்க்கனும் !

இருந்து ஒருநாள் பார்க்கனும் !

விருந்து ஒருநாள் வைக்கனும் !

சும்மாவா ! எங்க பொண்ணுங்கள பத்தி ரொம்ப லேசா சொல்லீட்டீங்க !

மாப்பிள்ளை வீட்டார் :

எங்க மாப்பிள்ளை மட்டும் சும்மாவா ?

எங்க மாப்பிள்ளை எப்படிபட்டவருன்னு தெரியுமா உங்களுக்கு......

பெண் வீட்டார் :

மாப்பிள்ளை பத்தி சொல்லுங்க !

தெரிஞ்சுக்குரம்........

மாப்பிள்ளை வீட்டார் :

தன் வீரத்தை உலகறியச் செய்யுற மாதிரி

யாராலும் அசைக்கக் கூட முடியாத சிவதனுஷை(வில்லை)

ஒரு கையால எடுத்து முறிச்சுப் போட்ட புஜபல பராக்கிரமசாலி எங்க ரங்கநாதரு......இது வீரத்திற்கு அடையாளம் இல்லைங்களா......

பெண் வீட்டார்

அப்படியா.....? எங்க கோதை நாச்சியார்... அதாவது ஆண்டாள் அம்மையார்

எப்படிப்பட்டவங்க தெரியுமா ?

மாப்பிள்ளை வீட்டார் :

எப்படிப்பட்டவங்க .... சொல்லுங்க தெரிஞ்சுக்குரம்....!

பெண் வீட்டார் :

எங்க கோதை பாவை நோன்பு பல வருஷம் இருந்து

கொஞ்சும் தமிழிலே பாடின திருப்பாவையத்தான் ....

மார்கழி மாதம் ஊரெல்லாம் கேட்குது.....

எவ்வளவு பெரிய படிப்பாளி எங்க கோதை ....!

அவங்கள பொண்ணா அடையணுமுன்னா உங்களுக்கு கொடுத்து வைச்சுருக்கனுங்க ...

அவங்க கலை படித்த மகளுங்க.... கலைமகளுங்க....

எங்க ஆண்டாள் பாடிய திருப்பாவை









 



Monday, July 8, 2024

                         கோம்பை


Latest Tamil News

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

 கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு  மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

     கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது

இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஊரின் வட கிழக்கில் உள்ள சால மலை கரட்டின் அடிவாரப் பகுதியில் , விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது.

இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன.

முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன.

அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன் ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.

முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும்.

இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளன.

இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால், பல தொல் தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.

  தினமலர் செய்தி

    09/07/2024


Sunday, July 7, 2024

 கோம்பையில் பெருங்கற்காலத்தை ச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடுப்பு 

கோம்பை மக்களும் பண்பாடும்

தேனி மாவட்டத்தில் , தேனியில் இருந்து கம்பம் போகும் சாலையில், உத்தம பாளையம் என்றொரு ஊர் வரும். அங்கு இறங்கி, தேவாரம் போகும் பாதையில்  ஐந்தாறு மைல் தூரத்தில் இருப்பது கோம்பை.

 கோம்பையில் விவசாய நிலத்தை சீர்செய்யும்போது பெரும் கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகளுடன் ஈம மட்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .அப்பகுதியை ஆய்வு செய்த போது பெருங்கற்காலத்தை சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தும் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈம மட்கலங்களை கண்டறிந்துள்ளனர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு  மேற்பட்டவையாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

     கோம்பை ஊர் சுமார் 2500 ஆண்டுகளுக்கு பழமையான பல வரலாற்றுச் சான்றுகளை பெற்றுள்ளது. இவ்வூரி்ல் வடகிழக்கில் உள்ள சாலமலை கரட்டின் அடிவாரப் பகுதியில்   விவசாய நிலத்தை சீர்படுத்தும் போது பெருங்கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் ஒன்றிலிருந்து முதுமக்கள் தாழியும் ,உடைந்த பகுதிகள் ,தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பெரிய பலகை கற்கள் ஈம மட்கலங்கள் வெளிவந்தன. முதுமக்கள் தாழியும் கழுத்துப்பகுதியில் கயிறு போன்று வடிவமைப்புடைய அலங்கார கோடுகள் இருந்தன,அலை அலையான அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவுள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருக்கின்றன இவை எல்லாம் தாழிகளை சுடுவதற்கு முன்பு ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவையாகும்.

         முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கும் ஈமமட்கலன்களான கலயம்,கூச ,தட்டு , கிண்ணம், தண்ணீர் குவளை மற்றும் சிறு மூடி போற்ற மட்கலங்கள் உடையாமல் முழுவடிவத்துடன் கிடைத்த.துள்ளது.இவற்றில் 14 செ.மீ உயரமுடைய  சிறிய கலயம் என பல்வேறு வடிவம் உயரத்திலும், அகலத்திலும் கிடைத்துள்ளன. இம்மட்கலங்களில் உடல்  பகுதி அகன்றும் வாய் மற்றும் அடிப்பகுதி குறுகிய தோற்ற வடிவில் பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கின்றன. மட்கலங்களை தரையில் வைப்பதற்கு  பயன்படுத்தப்படும் தாங்கிகள் மட்கலங்களுடன இணைத்தே வட்ட வடிவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இம்மட்கலங்கள் எல்லாம் வெளிப்புறம் சிவப்பாகவும், உட்புறம் கருப்பாகவும் உள்ளன. மண்ணிலிருந்து கிடைக்கும் காவி அல்லது சிவப்பு நிற வண்ணத்தை மட்கலன்களை சடுவதற்கு முன்பு பூசப்படுவதால் பார்ப்பதற்கு வழவழப்பான தோற்றத்தை தரும்.

     இங்கு கிடைத்த இப்பொருட்கள் மூலம் இப்பகுதியில் பலநூறு ஆண்டுகளுக்கு முந்தய மனிதன் நல்ல நாகரீகம் பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளனர். இவற்றுடன் அம்மக்களின் பண்பட்ட வாழ்வியல் முறைகளையும் நன்கு எடுத்துறைக்கும் வகையில் இம்மட்கலன்கள் உள்ளன. இப்பகுதி பெருங்கற்கள் மக்கள் இனக்குழுவாக வாழ்ந்த வாழ்விடப்பகுதியாகவும் அவர்கள் புதைகாடாகவும் இருந்துள்ளது என அறியவருகிறது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டால் இதுபோன்று இன்னும் பல தொல்தடயங்கள் கிடைக்கும் என கோம்பை மக்கள் கூறுகிறார்கள்.